உள்ளூர் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் யாழ். பல்கலைக்கழக வளாக காவலர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ். பல்கலைக்கழக விவசாய பீட வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 34 வயதுடைய காவலர் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்திருக்கலாமென்ற சந்தேகத்தில் ஆரம்பகட்ட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
கிளிநொச்சி மாவட்ட தடயவியல் பொலிஸ் அதிகாரிகள் இந்த சம்பவத்தில் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையிலே கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிபதி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்