உள்ளூர்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் இராணுவ வாகனம் அத்துமீறி உள்நுழைந்துள்ளது

இன்று காலை 10 மணியளவில் நல்லூர் திருவிழாவின் கொடியேற்ற நிகழ்வுடன் மஹோற்சவம் ஆரம்பிக்கப்பட்டபோது, ஆலய முன்வாயிலில் திடீரென இராணுவ வாகனம் ஒன்று நுழைந்ததாக தெரிகிறது.

திருவிழா காலத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தண்ணீர் வாகனத்தைத் தவிர மற்ற எந்தவொரு வாகனத்திற்கும் அல்லது பாதணிகளுடன் உள்ளோருக்கும் ஆலய வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை என்பதும், பாதுகாப்பு விதிகள் மிக கடுமையாக கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இராணுவ வாகனம் ஆலய வளாகத்தில் நுழைந்தமை, உலகத் தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இராணுவத்தின் அத்துமீறல் தொடருகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டும், திருவிழா நாட்களில் பௌத்த பிக்கு ஒருவர் வாகனத்தில் ஆலய வளாகத்திற்குள் நுழைந்து அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட சம்பவம் இடம்பெற்றிருந்தது என்பது இக்காரணத்தால் மீண்டும் நினைவூட்டப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்