உள்ளூர்

யாழ் செம்மணியில் 25ஆம் நாளான இன்று 4 புதிய எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

செம்மணி சிந்துப்பாத்தி ,ந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியில் இன்று நடைபெற்ற அகழ்வுப் பணிகளில் 4 புதிய எலும்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளதாவது
இன்றைய தினத்துடன் மனிதப் புதைகுழியின் இரண்டாவது கட்ட அகழ்வுப் பணிகள் 25ஆம் நாளாக முன்னெடுக்கப்பட்டன.

இன்றைய அகழ்வுப் பணிகளின்போது, மூன்று மனித எலும்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அவை நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதுவரை மொத்தமாக 115 எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் 102 எலும்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன எனவும் சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்