உள்ளூர்

யாழ் நாவற்குழியில் 1996ஆம் ஆண்டு காணாமலாக்கப்பட்ட 22 பேரின் ஆட்கொணர்வு வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் நாவற்குழியில் 1996ஆம் ஆண்டு இராணுவம் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்குப் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 22 பேரை தொடர்புடைய ஆட்கொணர்வு மனு, யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற இடம் சாவகச்சேரி நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் வருவதால், வழக்கு அங்குள்ள நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில், இவ்வழக்கிற்கு இன்று (30) தீர்ப்பு வழங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும், நீதிவான் விடுமுறையில் இருந்த காரணத்தினால், தீர்ப்பு வழங்கும் நாள் எதிர்வரும் ஆகஸ்ட் 28ஆம் திகதியாக மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்