யாழ்ப்பாணம் நாவற்குழியில் 1996ஆம் ஆண்டு இராணுவம் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்குப் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 22 பேரை தொடர்புடைய ஆட்கொணர்வு மனு, யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் நடைபெற்ற இடம் சாவகச்சேரி நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் வருவதால், வழக்கு அங்குள்ள நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில், இவ்வழக்கிற்கு இன்று (30) தீர்ப்பு வழங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும், நீதிவான் விடுமுறையில் இருந்த காரணத்தினால், தீர்ப்பு வழங்கும் நாள் எதிர்வரும் ஆகஸ்ட் 28ஆம் திகதியாக மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

