இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக அறிவிக்க உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக அறிவிக்க உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை சமூக ஆர்வலர் அமானி ரிஸாத் ஹமீத் தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி, பிரதமர், டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் இலங்கை மக்களின் கைவிரல் தடயங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் இந்தியாவுக்கு வழங்கப்படும் அபாயம் இருப்பதாகவும், இது நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு நேரடியான அச்சுறுத்தலாக அமையும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான அமைச்சரவை முடிவுகள் பொதுமக்கள் மற்றும் பாராளுமன்றத்திடம் தெரிவிக்கப்படாமல் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

