உள்ளூர் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் புலிகளின் ஆயுதங்களை தேடிய அகழ்வு நிறுத்தம்

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகள், எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில், ஏ-35 பிரதான வீதிக்கு அருகிலுள்ள தனியார் காணி ஒன்றில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் இஸ்மாத் ஜமீல் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நடவடிக்கையில் பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

எனினும், அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்றபோதும், எந்தவிதமான தடயங்களோ அல்லது ஆயுதங்களோ கண்டுபிடிக்கப்படவில்லை.

இதனால், சம்பந்தப்பட்ட அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்