கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தொன்றில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர், பின்னால் வந்த டிப்பர் ஒன்று முந்திச்செல்ல முயற்சித்த வேளையில் ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய டிப்பர் சாரதி, சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே சில நேரம் முறுகல் நிலையும் ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

