உள்ளூர்

மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலத்தினை அரசாங்கம் முன்வைக்கவுள்ளது- அமைச்சர் சந்தன அபேரத்ன

மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலம் தொடர்பான யோசனையை அரசாங்கத்தின் சார்பில் முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்னவும் தெரிவித்துள்ளார்.

இதே சட்டமூலத்துடன் தொடர்புடைய தனிநபர் பிரேரணை, அண்மையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் இரா. சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சமர்ப்பித்திருந்த பிரேரணைகளுடன் இது ஒத்துள்ளது.
எனவே இதை மீண்டும் ஆராய தேவையில்லை என்றும், உடனடியாக நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் . சாணக்கியன் வலியுறுத்தியிருந்தார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர், தனிநபர் பிரேரணை குறித்து ஆராய்ந்து வருவதாகவும், இதே பொருளில் அரசாங்கத்தின் சார்பில் பிரேரணையொன்றை விரைவில் முன்வைக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்