உள்ளூர்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு செம்மணி சிந்துபாத் மனித புதைகுழியை பார்வையிடவுள்ளனர்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத் மனித புதைகுழி பிரதேசத்தை ஓகஸ்ட் 4ஆம் திகதி பார்வையிட தீர்மானித்துள்ளதாக யாழ் மாவட்ட பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்தார்.

இந்த விஜயத்தில், ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களும் இரண்டு பணிப்பாளர்களும், யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்களும் அடங்கிய குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள குழுக்களுடன் கலந்துரையாடல்களும் நடைபெறவுள்ளன.

அதே நேரத்தில், காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகள் மற்றும் மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்