உள்ளூர் முக்கிய செய்திகள்

திருகோணமலை சம்பூரில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு நீதிபதி; திடீர் விஜயம்

திருகோணமலை சம்பூர் சிறுவர் பூங்கா அருகேயுள்ள கடற்கரையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு இன்று மூதூர் நீதிமன்ற நீதிபதி எச்.எம். தஸ்னீம் பௌசான் திடீரென விஜயம் மேற்கொண்டு, அந்த காணியின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடினார்.

அந்த பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வது தொடர்பான தீர்மானத்திற்காக எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் திகதி சட்ட மாநாடு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிபதி இன்று நேரில் பார்வையிட்டார்.

கடந்த ஜூலை 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ‘ஆயுபு’ என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிதைந்த மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.

இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, ஜூலை 23ஆம் திகதி நீதிமன்றம், அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் மற்றும் குற்றவியல் தடயக் காட்சிகள் அலுவலக அதிகாரிகள் கலந்து நிலைமையை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து அகழ்வுப் பணிகள் குறித்து தீர்மானிக்க, சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் திணைக்களத்திடமிருந்து அறிக்கைகள் கோரப்பட்டு, அவை கடந்த ஜூலை 30ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அவை அடிப்படையில் அகழ்வை மேற்கொள்வது குறித்து தீர்மானிக்க ஓகஸ்ட் 6ஆம் திகதி சட்ட மாநாடு நடைபெறவுள்ளதாகவும், அதில் பங்கேற்க வேண்டியவர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஆய்வின்போது மண்டை ஓடு, கைகள், கால்கள், முள்ளந்தண்டு, விலா எலும்புகள் உள்ளிட்ட கூடுதல் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்