உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் தமிழரசு கட்சியின் உயர்மட்ட குழு இன்று கூடியது

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உயர்மட்ட குழுக் கூட்டம் இன்று யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் சி.வீ.கே. சிவஞானத்தின் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்களுடன், இனப் பிரச்சினை தொடர்பான விடயங்களை கையாளுவதற்காக தெரிவு செய்யப்பட்ட ஏழு பேர் கொண்ட குழுவும் கூட்டத்தில் பங்கேற்றது.

பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் சி. சிறீதரன், ஞா. சிறீநேசன், க. கோடீஸ்வரன், து. ரவிகரன், இ. சிறீநாத், ப. சத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் கே. துரைராஜசிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன், மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே. சயந்தன் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்