உள்ளூர் முக்கிய செய்திகள்

திருமலை சம்பூர் மனித புதைகுழி 7வது மனித புதைகுழீயா? அகழ்வுக்கு நீதிமன்றம் அனுமதி

திருகோணமலையில் சம்பூர் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று மனித எலும்புகளின் அகழ்வாய்விற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த இடம் ஏழாவது மனித புதைகுழி என சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பூர் கடற்கரையில் ஜூலை 20 ஆம் திகதி பிரித்தானிய நிறுவனமான மெக், ஒரு மண்டை ஓடு உள்ளிட்ட எலும்புகளை கண்டுபிடித்தது.

மூதூர் நீதவான் எச்.எம். தஸ்னீம் பௌசான் கடந்த ஆகஸ்ட் 6ஆம் திகதி, மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் முறையான மயானம் இல்லை என்பதையும், மரணங்கள் இயற்கை காரணமா என்பதை தீர்மானிப்பது கடினம் என்பதையும் கருத்தில் கொண்டு, அகழ்வாய்வு நடத்த உத்தரவிட்டார்.

அகழ்வாய்வு பணிகள் கிழக்கு மாகாண இராணுவ கட்டளையாளர் மேற்பார்வையில், இராணுவ பொறியியலாளர் பிரிவு உதவியுடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

திருகோணமலை சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் நிபுணர் நிர்மால் பொறுக்கம் சமர்ப்பித்த அறிக்கையின் படி, கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கள் மூன்று ஆண்களுடையவை என்றும், இரண்டு எலும்புகளும் ஒன்றாகக் காணப்படுவதால் இயற்கை காரணமா மரணம் என்பது தெளிவாக தீர்மானிக்க கடினம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடம் 1990-ஆம் ஆண்டு சம்பூர் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையதாகவும், படுகொலையின் நினைவுச்சின்னத்துக்கு அருகில் இருப்பதாகவும் பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்