உள்ளூர் முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் இளைஞன் வெட்டிக் படுகொலை, மாமனார் மீது சந்தேகம்

கொக்குத்தொடுவாய் களப்பு கடற்கரையில் தொழிலுக்காக சென்ற 21 வயது ஜெயராஜ் சுபராஜ், அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நேற்று (08-08) அதிகாலை 2:30 மணியளவில் நடந்தது.

இளைஞன் மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தபோது பின்தொடர்ந்து வந்த குற்றவாளிகள் கூரிய ஆயுதத்தால் தாக்கி வெட்டியதாக விசாரணையில் தெரியவந்தது.

அருகில் தொழிலுக்கு வந்த மற்றொருவர் அவனை வீதியில் காயங்களுடன் விழுந்திருக்கக் கண்டுபிடித்து, உடனே அவனுடைய தந்தை மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரை அழைத்தார்.

யானைகள் நடமாட்டம் அதிகமானதால் யானை தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது, ஆனால் உடலில் வெட்டுக்காயங்கள் இருப்பது பின்னர் தெரியவந்தது

கொக்குளாய் போலீசார் விரைந்து தீவிர விசாரணைகளைத் தொடங்கி, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை ஆய்வு செய்தார்.

மோப்பநாய் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டு, கைரேகை மற்றும் உடற்கூறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சடலம் உறவினர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், ஜெயராஜின் மாமனார் பொலிஸ் நிலையிற்கு அழைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளார்

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்