யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் 16 வயதுடைய சந்திரானந்தன் வர்ணயா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கடந்த மாதம் 5 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர், சில நாட்களில் மயக்க நிலையை அடைந்தார்.
தொடர்ந்து மயக்க நிலையில் இருந்த அவர், வெள்ளிக்கிழமை அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது சடலத்தைச் சார்ந்த மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனையில், கிருமித் தொற்று காரணமாக மரணம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

