உள்ளூர்

யாழில் 16 வயது மாணவி பரிதாபகரமாக உயிரிழப்பு, கிராமமே அதிர்ச்சி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் 16 வயதுடைய சந்திரானந்தன் வர்ணயா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கடந்த மாதம் 5 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர், சில நாட்களில் மயக்க நிலையை அடைந்தார்.

தொடர்ந்து மயக்க நிலையில் இருந்த அவர், வெள்ளிக்கிழமை அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது சடலத்தைச் சார்ந்த மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனையில், கிருமித் தொற்று காரணமாக மரணம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்