கல்ஃப் நியூஸ் வெளியிட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டு நிலவரப்படி 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர மதிப்புடன் இஸாரா நாணயக்கார இலங்கையின் முதல்நிலை செல்வந்தராகத் திகழ்கிறார்.
இதன் மூலம், அவர் தம்மிக்க பெரேராவை முந்தி நாட்டின் பணக்கார பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
கல்ஃப் நியூஸ் வெளியிட்ட தெற்காசிய பணக்காரர்களின் பட்டியலில், இந்திய தொழிலதிபர் முகேஸ் அம்பானி 118 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர மதிப்புடன் பிராந்தியத்தின் மிகப்பெரிய செல்வந்தராக இடம்பெற்றுள்ளார்.
பாகிஸ்தானின் ஸாஹித் கான் 13.5 பில்லியன், பங்களாதேஸஷின் மோசா பின் ஸம்ஸர் 12 பில்லியன், நேபாளத்தின் பினோத் சவுத்ரி 1.6 பில்லியன் மற்றும் இலங்கையின் இஸாரா நாணயக்கார 1.6 பில்லியன் டொலர் நிகர மதிப்புடன் தங்களது நாடுகளின் முதலிடத்தில் உள்ளனர்.
அம்பானியின் சொத்து மதிப்பு, பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள ஸாஹித் கானின் மதிப்பை விட கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸாரா நாணயக்கார, 10க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி சேவைகள் மற்றும் முதலீட்டு நிறுவனமான டுழுடுஊ ஹோல்டிங்ஸை வழிநடத்தி வருகிறார்.
உலகளாவிய நுண்நிதி மற்றும் காப்பீட்டு துறைகளில் இலங்கையின் இருப்பை விரிவுபடுத்துவதில் அவர் வகித்த பங்கு குறிப்பிடத்தக்கது.

