உள்ளூர் முக்கிய செய்திகள்

மன்னாரில் வைத்தியசாலையில் உயிரிழந்த சிந்துஜாவின் மரணம் தொடர்பில் தாதி உட்பட மூவர் கைது

மன்னாரில் பட்டதாரி இளம் தாயான மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பாக தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்களும் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் நேற்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டு ஜூலை 28ஆம் தேதி, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிந்துஜா, மருத்துவக் கவனயீனத்தால் ஏற்பட்ட அதீத இரத்தப்போக்கின் காரணமாக உயிரிழந்தார் என மருத்துவ பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தியது.

இதனையடுத்து, கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர், இரண்டு தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஆகிய ஐவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

தற்போது கைது செய்யப்பட்ட மூவரைத் தவிர, மீதமுள்ள வைத்தியர் ஒருவரையும் மற்றொரு தாதிய உத்தியோகத்தரையும் கைது செய்ய வேண்டும் என சிந்துஜா சார்பில் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு மீதான மேலதிக விசாரணை மற்றும் விசாரணை நாளாகம் வரும் 12ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்