உள்ளூர் முக்கிய செய்திகள்

தீயில் சிக்கினான் சிறுவன் தாயும் தந்தையும் தாயின் காதலனும் சட்டத்தில் சிக்கினர்

இரத்தினபுரி – பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ, மஹவத்தப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த சனிக்கிழமை (09-08) அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய ஏழு வயது சிறுவன் பலியாகியுள்ளார்.

தீ பரவிய நேரத்தில் வீட்டில் இருந்த சிறுவன் கடுமையாக காயமடைந்து, பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான ஆரம்ப விசாரணைகளில், உயிரிழந்த சிறுவனின் தாய், தந்தை மற்றும் தாயுடன் தகாத உறவில் இருந்ததாகக் கூறப்படும் நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைதான மூவரும் நேற்று (10-08) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, பலாங்கொடை பதில் நீதிவான் தேசபந்து சூரியபடபெத்தி, அவர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்