இரத்தினபுரி – பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ, மஹவத்தப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த சனிக்கிழமை (09-08) அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய ஏழு வயது சிறுவன் பலியாகியுள்ளார்.
தீ பரவிய நேரத்தில் வீட்டில் இருந்த சிறுவன் கடுமையாக காயமடைந்து, பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான ஆரம்ப விசாரணைகளில், உயிரிழந்த சிறுவனின் தாய், தந்தை மற்றும் தாயுடன் தகாத உறவில் இருந்ததாகக் கூறப்படும் நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைதான மூவரும் நேற்று (10-08) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, பலாங்கொடை பதில் நீதிவான் தேசபந்து சூரியபடபெத்தி, அவர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

