இலங்கையின் பொருளாதார மீட்சி, ஆரம்பத்தில் எதிர்பார்த்ததைவிட வேகமாக முன்னேறி வருகிறது என மத்திய வங்கி ஆளுநர் கலாநதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, அடுத்த ஆண்டுக்குள் நாடு நெருக்கடிக்கு முந்தைய நிலைகளுக்கு மீண்டும் செல்லும் என்றார்
நெருக்கடியின் உச்சத்தில் பொருளாதார சீர்திருத்தங்கள் எதிர்பார்த்ததைவிட விரைவாக முடிவுகளைத் தரும் நிலைக்கு வந்துள்ளன என்றும், சர்வதேச ஊடகத்திற்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘ஒரு நாடு நெருக்கடியால் பாதிக்கப்பட்டவுடன், உற்பத்தி இழப்பை மீட்டெடுக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
எங்கள் விஷயத்தில், மூன்று ஆண்டுக்குள் அந்த நிலையை அடைந்துள்ளோம்,’ என்று அவர் விளக்கினார்.
அடுத்த ஆண்டுக்குள், வேலைவாய்ப்பு, வறுமைக் குறைப்பு, வருமானம் மற்றும் வாழ்க்கைச் செலவு போன்ற முக்கிய துறைகளில் இலங்கை நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை விட சிறப்பாக இருக்கும் என ஆளுநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
‘அடுத்த இரண்டு ஆண்டுகளில் வருமானம் அதிகமாக இருக்கும், மேலும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில், நாம் முன்பு இருந்த நிலையை மீண்டும் அடைய முடியும்,’ என்றும் அவர் கூறினார்.

