உள்ளூர்

ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டம் – பொலிஸார் குவிப்பு

இன்று ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக பெரும் போராட்டம் ஒன்று நடந்தது.

சம்பவத்தின் போது அந்த பகுதியில் பெரும் பதற்றம் உருவாகியதால், பொலிஸார் குவிந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதையும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன நிலங்களை ஆக்கிரமிப்பதையும் எதிர்த்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக, முத்துநகர் பகுதியில் உள்ள 600 ஏக்கர் வயல் நிலத்தை இந்திய நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வன நிலங்களின் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துமே இந்த போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் பங்கேற்ற மாணவர் செயற்பாட்டாளர்கள் வசந்த முதலிகே மற்றும் லஹிரு வீரசேகர ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே மூத்த பொலிஸ் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்