தாய்நாட்டை பாதுகாக்க எதிரணிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் அமைச்சர் மற்றும் கட்சி உறுப்பினர் சி.பி. ரத்நாயக்க இதுகுறித்து கூறியதாவது:
‘நாட்டு மக்களுக்கு தலைமைத்துவம் அவசியம். எனவே, முதலில் நாம் ஒன்றிணைந்து கூட்டு எதிரணியாக செயல்படுவோம்.
அதன் பின்னர் பயணத்தை தீர்மானிக்கலாம்.
அரசாங்கம் ஆட்சியில் ஒரு வருடமாக இருக்கிறது. ஆனால் பிரச்சினை ஏற்பட்டால், மக்கள் பிரதிநிதி கடிதம் பெற முடியவில்லை.
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க முடியவில்லை.
பதவியைவிட தாய்நாடுதான் முக்கியம் என்பதை உணர்ந்து, அரசாங்க ஊழியர்களும், படை அதிகாரிகளும் செயற்பட வேண்டும்.’

