உள்ளூர்

அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கிய நிதியை அதிகாரிகள் சரியாக பயன்படுத்தவில்லை – ஜனாதிபதி

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு துறைக்கும் தேவையான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டிருந்தாலும், அவை உரிய திட்டங்களுக்கு முறையாக பயன்படுத்தப்படவில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கான 2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

நிதி ஒதுக்கப்பட்டுள்ள கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கம், கிளிநொச்சி, மன்னார் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் விளையாட்டு அரங்குகளின் புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் உள்ள 8 நிறுவனங்களின் 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்ற நிலை தனித்தனியாக மதிப்பாய்வு செய்யப்பட்டது.
இதன்போது, கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை முறையாக நிறைவேற்ற முடியாத நிலை குறித்து ஜனாதிபதி அதிருப்தி வெளியிட்டார்.
இந்த நிதியாண்டில் அவற்றை முழுமையாகப் பயன்படுத்தி மக்களுக்கு பயனளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் விளையாட்டு கலாசாரத்தை உருவாக்கும் திட்டத்தை தயாரிக்கவும், பாடசாலை மட்டத்திலான விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கவும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், விளையாட்டு மேம்பாட்டிற்கான புதிய விரிவான திட்டத்தை விரைவில் சமர்ப்பிக்குமாறும் அவர் அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அத்துடன், அண்மையில் கொழும்பில் நடைபெற்ற 2025 தேசிய இளைஞர் மாநாட்டில் பங்கேற்ற இளைஞர்கள் மற்றும் பெண்களின் பங்களிப்புடன், இளைஞர் விவகார அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்