உள்ளூர்

வடகிழக்கு கதவடைப்பபை புறக்கனிக்கின்றது வவுனியா வர்த்தகர் சங்கம்

இலங்கை தமிழரசு கட்சியால் எதிர்வரும் திங்கட்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாதென வவுனியா வர்த்தகர் சங்கத்தின் நிர்வாக சபை தீர்மானித்துள்ளது.

இந்தத் தீர்மானத்தை சங்கத் தலைவர் கே. கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வடகிழக்கில் அதிகரித்து வரும் இராணுவப் பிரச்சன்னம் மற்றும் முல்லைத்தீவு முத்தையன் கட்டிலில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வடகிழக்கு தழுவிய ஹர்த்தாலை மேற்கொள்ள இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.

இதையடுத்து, வவுனியா மாவட்ட வர்த்தகர் சங்கத்தின் ஆதரவைப் பெறும் நோக்கில், எம். ஏ. சுமந்திரன் இரு நாட்களுக்கு முன்பு சங்க பிரதிநிதிகளை நேரடியாக சந்தித்து, ஹர்த்தாலில் இணையுமாறு கோரினார்.

இந்நிலையில், இன்று கூடிய நிர்வாக சபை கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள், அன்றைய தினம் வியாபார நிலையங்களை வழமையானபடி திறந்து வைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர்.

இதன் விளைவாக, வரும் திங்கட்கிழமை வவுனியாவில் வியாபாரச் செயல்பாடுகள் வழமைபோல் நடைபெறும் என்றும், ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது என்றும் நிர்வாக சபை முடிவு செய்துள்ளது என்று சங்கத் தலைவர் கிருஸ்ணமூர்த்தி உறுதிப்படுத்தினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்