கொழும்பில் பாதாள உலக தாக்குதலை மேற்கொள்ளவிருந்த சந்தேக நபர் நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகிக்கப்படும் நபர் ஓய்வுபெற்ற இராணுவ கமாண்டோ படை சார்ஜென்ட் மேஜர் ஒருவர் ஆவார்.
அவரிடம் செக்கோஸ்லோவாக்கியாவில் தயாரிக்கப்பட்ட தானியங்கி கைத்துப்பாக்கி, தோட்டக்கள் மற்றும் போதைப்பொருட்கள் இருந்தன.
சந்தேக நபர் மாலபேயில் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.
கைதான நபரிடமிருந்து பல இராணுவ கமாண்டோ உடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விசாரணையில், டுபாயில் உள்ள இராணுவ கமாண்டோ படையிலிருந்து தப்பிச் சென்ற ஒரு சிப்பாய் துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்களை சந்தேக நபருக்கு அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் கூறுவதில், சந்தேக நபர் பாதாள உலக தாக்குதலை நடத்த தயாராகி வந்ததாக நம்பப்படுகிறது.
இவர் பெப்ரவரி மாதம் ஓய்வுபெற்ற இராணுவ கமாண்டோ படை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

