உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழரசின் கதவடைப்பு அழைப்பிற்கு திருக்கோவில் பிரதேச சபை சுயேட்சை குழு ஆதரவு

எதிர்வரும் திங்கட்கிழமை (18-08) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் வடகிழக்கில் அறிவிக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு, திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் சு. சசிக்குமார் தலைமையிலான சுயேட்சை குழு முழுமையான ஆதரவை அறிவித்துள்ளது.

இத்துடன், திருக்கோவில் பிரதேச மக்களும் வர்த்தகர்களும் இந்த ஹர்த்தாலுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த தொடர்பில் அவர் தெரிவித்ததாவது:

வடகிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னத்தையும், முல்லைத்தீவில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோருவதையும், செம்மணி போன்ற இனப்படுகொலை சம்பவங்களுக்கு நீதி நிறைவேற்றப்பட வேண்டியதையும் கருத்தில் கொண்டு அனைவரும் இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

இது கட்சி சார்ந்த ஒன்றல்ல் இனத்தின் நலனை கருதிய நடவடிக்கை என்பதால், அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவர் வலியுறுத்தினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்