உள்ளூர்

பிரதமர் பதவியில் மாற்றமா? மனம் திறந்தார் பிரதமர் ஹரிணி

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசில் குழப்பம் உள்ளது என எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்பி ஆட்சியை பிடிக்கக் கூடாது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாட்டின் மக்கள் அளித்த அமோக ஆதரவை பெற்ற அரசை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமரை மாற்ற வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது ஜனாதிபதியின் முடிவில் இருக்கும்.
இதுபற்றிய எந்த அவசரமும் எதிர்க்கட்சிகளுக்கு தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்

பிரதமர் பதவியை எந்த சந்தர்ப்பத்திலும் துஷ்பிரயோகம் செய்யவில்லையெனவும் ஜனாதிபதி தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை கேள்விக்குட்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியும், தேசிய மக்கள் சக்தி அரசு மீது எந்தவொரு அழுத்தத்தையும் பிரயோகிக்கவில்லை.

ஆனால் எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்; சில ஊடகங்கள் இதற்கு முக்கியத்துவம் தருகின்றன.

அனைத்து ஊடகங்களும் நடுநிலையுடன் செயல்பட்டு, உண்மை நிலைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்