உள்ளூர் முக்கிய செய்திகள்

வடகிழக்கு கடையடைப்பிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது

அக்கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் வெளியிட்ட அறிக்கையில், முல்லைத்தீவில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இளைஞரின் மரணத்திற்கு நீதி கோருவதும், இஸ்ரேலிய நபர்களுக்கு விசா விலக்கு வழங்கப்பட்டிருப்பது கவலைக்கிடமானது என்பதையும், அவர்கள் இஸ்ரேலிய படை வீரர்களே என சந்தேகம் எழுப்பப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சூழ்நிலைகளின் அடிப்படையில் தமிழ் அரசுக் கட்சியின் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது நீதி மற்றும் பொறுப்புக் கூறலைக் கோரும் அமைதியான எதிர்ப்பாகும் என்றும், ராணுவத்தினுள் நிலவும் தண்டனையற்ற சூழ்நிலைகளுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்பும் நடவடிக்கையாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு, நமது முஸ்லிம் சகோதர சகோதரிகள் தமது கடைகளை அடைத்து போராட்டத்தில் இணைந்து ஒற்றுமையை வெளிப்படுத்துமாறு அறிக்கையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்