உள்ளூர்

வட, கிழக்கில் 30 ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான ஆகஸ்ட் 30 ஆம் திகதி முன்னிட்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடைபெறவுள்ளதாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த போராட்டங்கள் வருடாந்தம் நடைபெறும் விழாவாக, வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோரின் நினைவுக்கு முன்னோட்டமாக நடைபெறுகிறது.

இவ்வருடமும் எதிர்வரும் 30 ஆம் திகதி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனித்தனியான இரண்டு பெரிய கவனயீர்ப்புப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போராட்டங்கள் நடைபெறும் இடங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு தரப்படும்.
மேலும், செப்டம்பர் 22 ஆம் திகதி ஜெனீவாவில் தொடங்கவுள்ள வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவின் 29 ஆவது கூட்டத்தில், வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்