உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியாவில் ஹர்த்தால் வெற்றியா, தோல்வியா? உண்மை என்ன?

வடக்கு – கிழக்கு தழுவிய ஹர்த்தாலில், வவுனியாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும்பாலும் பாதிக்கப்படாமல் இருந்தது.
சில செயல்பாடுகள் மட்டுமே ஸ்தம்பிதமடைந்தன.

வடக்கு – கிழக்கில் அதிகரித்திருக்கும் இராணுவப் பிரசன்னத்திற்கும் முல்லைத்தீவு முத்தையன்கட்டில் இடம்பெற்ற சம்பவத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று ஹர்த்தால் ஒன்றை முன்னெடுக்க இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.

எனினும், வவுனியாவில் இன்று காலை முதல் பொதுமக்கள் வழமைபோலவே தங்கள் அன்றாடச் செயல்பாடுகளில் ஈடுபட்டனர்.
நகரின் பெரும்பாலான வணிக நிலையங்கள் திறந்திருந்தன. சில வணிக நிலையங்கள் மட்டும் மூடப்பட்டிருந்தன.

பாடசாலைகள் வழமைபோல் செயல்பட்டபோதிலும், மாணவர் வரவு சற்றுக் குறைந்திருந்தது. வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களும் இயல்பாக செயல்பட்டன.

இதற்கிடையில், வவுனியா உள்ளூர் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கம் ஹர்த்தாலை முழுமையாக ஆதரித்தது.

அவர்களது மொத்த வியாபார சந்தை கடைத்தொகுதிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

பழைய பேருந்து நிலையம் மற்றும் பசார் வீதியில் உள்ள சில இஸ்லாமிய வணிக நிலையங்கள் மட்டும் இயங்கின.

மேலும், புறநகரப் பகுதிகளான குருமன்காடு, செட்டிகுளம், நெடுங்கேணி, கனகராயன்குளம், புளியங்குளம் உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலான வணிக நிலையங்கள் திறந்திருந்தன.

சில கடைகள் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து மூடப்பட்டிருந்தன.

போக்குவரத்து சேவைகள் முழுமையாக வழமைபோலவே இடம்பெற்றன

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்