உள்ளூர்

மகிந்தவின் பெறா மகன் சஷீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற போராட்டங்களின் போது, செவனகல – கிரிப்பன் வேவ பகுதியில் உள்ள அரசாங்க நிலம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்துக்கான இழப்பீட்டை, மற்றொருவரின் பெயரில் பெற்றதாகக் கூறப்படும் விவகாரத்துடன் தொடர்புடையதாக அவர் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி காலை நுகேகொடை பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் சஷீந்திர ராஜபக்ஷவை கைது செய்திருந்தனர்.
பின்னர் அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்