முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற போராட்டங்களின் போது, செவனகல – கிரிப்பன் வேவ பகுதியில் உள்ள அரசாங்க நிலம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்துக்கான இழப்பீட்டை, மற்றொருவரின் பெயரில் பெற்றதாகக் கூறப்படும் விவகாரத்துடன் தொடர்புடையதாக அவர் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி காலை நுகேகொடை பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் சஷீந்திர ராஜபக்ஷவை கைது செய்திருந்தனர்.
பின்னர் அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றார்.

