உள்ளூர் முக்கிய செய்திகள்

காரைதீவில் ‘நிருத்தியார்ப்பணம்’ பரதநாட்டிய நிகழ்ச்சி கோலாகலமாக நடைப்பெற்றது

கல்முனை முத்தமிழ் கலைக்கூடம் நடத்திய இந்நிகழ்ச்சி, காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில் கலைக்கூடத் தலைவர் சிவசிறி அடியவன் பிரமின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவன பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி பாரதி கென்னடி கலந்து சிறப்பித்தார்.

மேலும், கௌரவ அதிதிகளாக நிறுவனத்தின் நடனம் அரங்காற்றுகைத் திணைக்கள சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி துரைசிங்கம் உஷாந்தி, மட்டக்களப்பு வலயக் கல்வி பணிமனையின் அழகியல் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி மலர்விழி சிவஞானசோதிகுரு, ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளரும் மூத்த ஊடகவியலாளருமான விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதேபோன்று, அழைப்பு அதிதிகளாக கல்முனை வலய நடன ஆசிரிய ஆலோசகர் ரிகே. ரீசா பத்திரண மற்றும் திருக்கோவில் ஆசிரிய ஆலோசகர் திருமதி தங்கமாணிக்கம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

நடனத் துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த ஐந்து மாணவிகளின் பரதநாட்டிய ஆற்றுகைகள் இந்நிகழ்வின் முக்கிய சிறப்பாக அமைந்தன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்