உள்ளூர்

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு குற்றப் புலனாய்வுத் துறை அழைப்பு விடுத்துள்ளது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை  எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அரசாங்க நிதி தனியார் வெளிநாட்டு பயணத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வெளிநாட்டு பயணம் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பயணத்தில் முன்னாள் ஜனாதிபதியுடன் 10 பேர் இணைந்து சென்றிருந்தனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இதே விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடம் இருந்து குற்றப் புலனாய்வுத் துறை முன்பே வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்