முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அரசாங்க நிதி தனியார் வெளிநாட்டு பயணத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வெளிநாட்டு பயணம் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்தப் பயணத்தில் முன்னாள் ஜனாதிபதியுடன் 10 பேர் இணைந்து சென்றிருந்தனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இதே விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடம் இருந்து குற்றப் புலனாய்வுத் துறை முன்பே வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

