தாக்குதல் ஒன்றை நடத்தும் நோக்கில் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த மூன்று தமிழ் இளைஞர்களை கைது செய்ய, பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரி புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது.
ஜூலை 21 ஆம் திகதி கிரிபத்கொடையில் முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர் ஒருவர் றுரு-56 வகை துப்பாக்கியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் போது, அவர் மற்றும் அவரது குழுவினர் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்தது.
மேலும், வவுனியாவில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
அவற்றை கொழும்புக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த கைக்குண்டுகளை மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் மூவர் தொடர்பான விவரங்களை புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ளது.
இவர்களை அடையாளம் காணும் வகையில் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல் தெரிந்தால் 071-8591966 அல்லது 071-8596150 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் தொடர்பான விவரங்கள்:
ஜீவராசா சுஜீபன் (30)
முகவரி: காந்தி நகர், நேரியக்குளம், வவுனியா
தேசிய அடையாள அட்டை இலக்கம்: 950554215ஏ
இளங்கோ இசைவிதன் (27)
முகவரி: எண் 379, பிளாக் 03, மானிக் பண்ணை, செட்டிகுளம்
தேசிய அடையாள அட்டை இலக்கம்: 199836210402
மகேந்திரன் யோகராசா (27)
முகவரி: அராலி மேற்கு, வட்டுக்கோட்டை
தேசிய அடையாள அட்டை இலக்கம்: 981633881ஏ
தகவல் வழங்க விரும்புவோர் மேற்கண்ட தொலைபேசி எண்கள் மூலம் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு புலனாய்வுப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.


