உள்ளூர்

திருக்கோயில் பிரதேசத்தில் சங்கங்களுக்கிடையிலான பிரச்சனைகள் தீர்க்க கலந்துரையாடல்

இன்று (21.08.2025) திருக்கோயில் பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சசிக்குமார் தலைமையில், பிரதேச மீனவ சங்கங்கள், விவசாய சங்கங்கள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

கூட்டத்தில், விவசாய சங்கங்கள் முன்வைத்த பிரச்சனைகள் மற்றும் மீனவ சங்கங்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக விரிவான விவாதம் இடம்பெற்றது.
பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிர்காலத்தில் நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன.

மேலும், பல சங்கங்கள் தங்களது பிரச்சனைகளை நேரடியாக தவிசாளரிடம் முன்வைத்ததையடுத்து, சில விடயங்கள் உடனடியாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவற்றிற்கு விரைவான தீர்வுகள் காணப்பட்டன.

அதேவேளை, இன்னும் நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு வருங்காலத்தில் தீர்வுகளை வழங்குவதாகவும், மக்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படுவதாகவும் தவிசாளர் சசிக்குமார் ஊடகங்களிடம் உறுதியளித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்