உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் ஹர்த்தாலின் போது மட்டு மேயர் மிரட்டப்பட்டாரா?

மட்டக்களப்பில் ஹர்த்தாலின் போது மாநகர சபை முதல்வரை அவமதிப்பதாக திட்டமிட்ட நடவடிக்கைகள் நடைபெற்றதற்கான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாநகர சபை உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியினரைக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மட்டக்களப்பில் ஹர்த்தால் காரணமாக மாநகர சபை முதல்வரை அவமதிப்பதாக திட்டமிட்ட நடவடிக்கைகள் நடைபெற்றதற்கான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாநகர சபை உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியினரைக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இன்றைய  மாநகர சபை அமர்வில், முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் சபை நடைமுறைகளில் அனைத்து முன்மொழிவுகளும் வாசிக்கப்பட்டு, அனுமதிகள் வழங்கப்பட்டன.

உறுப்பினர் துரைசிங்கம் மதன் கடந்த 18 ஆம் திகதி ஹர்த்தால் நாளில் மாநகர சபை முதல்வரை அவமதிக்கும் வகையில் செயற்பாடுகள் நடந்ததாகவும், அதை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் முன்னெடுத்ததாகவும் தெரிவித்து, முதல்வர் சம்பவத்தை தெளிவுபடுத்த வேண்டும் என கோரினார்.

இதன்போது மாநகர சபை முதல்வர், ஹர்த்தால் நாளில் வாகனத்தில் சென்றபோது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலர் கருத்துக்களை தெரிவித்ததாகவும், எந்த வர்த்தக நிலையங்களையும் மூட வற்புறுத்தவில்லை என்றும் விளக்கியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், ஹர்த்தால் அவர்களது தனிப்பட்ட தேவைக்காக ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாகவும் கூறினர்.

அவர்கள் எந்த போராட்டத்திற்கும் எதிர்ப்படவில்லை என்றாலும், மக்களின் அன்றாட வாழ்க்கையை குழப்பும் வகையில் திட்டமிட்ட போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

சபை நடவடிக்கைகள் தொடர்ந்தபோது, சத்துருக்கொண்டான் படுகொலைக்கு நீதி கோரும் விசேட பிரேரணை க. ரகுநாதன் மற்றும் தயாளகௌரி தலைமையில் சமர்ப்பிக்கப்பட்டது.

முதல்வர் இதை ஏற்று, இருவரும் இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் அஞ்சலி செலுத்தினர்; பின்னர் அவர்கள் விசேட உரைகளை வழ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்