உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாண மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், யாழ்ப்பாணத்துக்கென தனிப்பட்ட துறைமுகம் இல்லாததால் மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், 165 மில்லியன் ரூபா செலவில் கொழும்புத் துறைமுகத்தையும் நவீனமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் நல்லதொரு துறைமுகம் இல்லாத நிலையால், வாழைச்சேனை துறைமுகத்தை விரிவுபடுத்த 1,700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வேலை அடுத்தாண்டு ஆரம்பிக்கப்படும் என்றும் கூறினார்.
யாழ்ப்பாண மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாண மயிலிட்டி துறைமுகத்தை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், யாழ்ப்பாணத்துக்கென தனிப்பட்ட துறைமுகம் இல்லாததால் மயிலிட்டி துறைமுகத்தை நவீன துறைமுகமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், 165 மில்லியன் ரூபா செலவில் கொழும்புத் துறைமுகத்தையும் நவீனமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் நல்லதொரு துறைமுகம் இல்லாத நிலையால், வாழைச்சேனை துறைமுகத்தை விரிவுபடுத்த 1,700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வேலை அடுத்தாண்டு ஆரம்பிக்கப்படும் என்றும் கூறினார்.

அத்துடன், மன்னார் பேசாலையில் இறங்குத்துறை அமைக்கவும், பேசாலை மக்களுடன் கலந்துரையாடி துறைமுகம் கட்டும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், யாழ்ப்பாண குருநகர் பகுதியில் இறங்குத்துறை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார்

அத்துடன், மன்னார் பேசாலையில் இறங்குத்துறை அமைக்கவும், பேசாலை மக்களுடன் கலந்துரையாடி துறைமுகம் கட்டும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், யாழ்ப்பாண குருநகர் பகுதியில் இறங்குத்துறை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்