உள்ளூர்

மட்டக்களப்பில் 1990 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இன்று நினைவேந்தப்பட்டனர்

1990ஆம் ஆண்டு சித்தாண்டி பகுதியில் நடைபெற்ற சுற்றிவளைப்பின்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தை நினைவுகூரும் நிகழ்வு இன்று சித்தாண்டி சித்திர வேலாயுத சுவாமி கோவில் முன்றலில் இடம்பெற்றது.

இந்த நினைவேந்தலை சித்தாண்டி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி அ.அ. அமலநாயகி, சட்டத்தரணி த. ஜெயசிங்கம், பிரதேச சபை உறுப்பினர் சி. வவானந்தன், சித்தாண்டி, முறக்கொட்டசேனை, சந்திவெளி பகுதிகளிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்