உள்ளூர் முக்கிய செய்திகள்

ஈழவிடுதலை போராட்டத்தில் முதல் சயனைட் நஞ்சருந்திய தியாகி பொன் சிவகுமாரனின் 75வது பிறந்தநாள் நினைவுகூரப்பட்டது.

தியாகி பொன் சிவகுமாரின் 75வது பிறந்தநாள் நினைவு தினம் நேற்று (26-08) உரும்பிராயில் உள்ள அன்னாரின் சிலையில் தியாகி பொன் சிவகுமார் நினைவேந்தல் குழு உறுப்பினர் எஸ்.செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் ப.சீவரத்தினம  மற்றும் நினைவேந்தல் குழு உறுப்பினர்கள் உட்பட சிலர் கலந்து கொண்டனர்.

பொன்னுத்துரை சிவகுமாரன் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார்.
யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி வீரச்சாவை தழுவினார்.
ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

உரும்பிராயில் 1950 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 26 ம் திகதி பொன்னுத்துரை, அன்னலட்சுமி ஆகியோருக்கு மூன்றாவது மகவாக சிவகுமாரன் பிறந்தார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வி கற்றவர். பின்னர் தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தில் தன்னை ஈடுபடுதியிருந்த போது பொலிஸாரிடம் உயிருடன் பிடிபடக்கூடாதென்ற நோக்கில் சயனைட் நஞ்சருந்தி உயிரிழந்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்