உள்ளூர் முக்கிய செய்திகள்

ஜெனீவாவில் தமிழர் போராட்டத்தை நீர்த்துப்போக செய்ய ரோஹண விஜேயவீராவின் மகன் முயற்சி

ஜனநாயக மக்கள் முன்னணிக் (NPP) அரசாங்கம், ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் அழுத்தத்திற்கு பணிந்து தவறு செய்துள்ளதாகக் குற்றம்சாட்டிய இரண்டாம் தலைமுறை இயக்கம், அந்தப் பிழையைச் சீர்செய்ய அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்று என்.எம். பேரேரா மையத்தில் கையொப்பப் போராட்டத்தை ஆரம்பிக்கிறது.

கையொப்ப சேகரிப்பு நிகழ்வுக்குப் பின்னர், சிறப்புக் கருத்தரங்கமும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டாம் தலைமுறையின் தலைவரும், படுகொலை செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி (துஏP) நிறுவனர் ரோஹண விஜேயவீராவின் மகனுமான உவிந்து விஜேயவீரா, ஊடகங்களிடம் பேசியபோது, ஜெனீவா சவாலுக்கு எதிராக ஒருங்கிணைந்த திட்டமிட்ட வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லாத நிலையில், இலங்கை விடுதலைப் புலிகளை வீழ்த்திய வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாத சர்வதேச சமூக உறுப்பினர்கள் பகைமையான திட்டங்களை முன்னெடுத்ததாகக் கூறினார்.

அதில் ஜெனீவா நடைமுறை ஒரு பகுதியாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்