யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று வியாழக்கிழமை மேலும் எட்டு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று வியாழக்கிழமை மேலும் எட்டு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதற்கு முன்னதாக இன்று ஆறு எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டன.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று நான்காவது நாளாக தொடர்ந்தது.
நீதிமன்றத்தின் உத்தரவின்படி இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 45 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று 36 ஆம் நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.
இதுவரை கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுகளில் மொத்தம் 164 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் , இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 177 ஆக உயர்ந்துள்ளது.

