உள்ளூர் முக்கிய செய்திகள்

வேலணை – மண்கும்பான் பிள்ளையார் கோயில் அருகே விசமிகள் தீவைத்ததால் பெரும் சிக்கல்

வேலணை – மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் உள்ள வயல்வெளிகளில் புதர்களுக்கு விசமிகள் தீவைத்ததால், அப்பகுதியைச் சுற்றி சென்ற மக்களுக்கு வீதியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து பிரதேச சபைத் தவிசாளருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, உடனடி நடவடிக்கையாக யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது.

தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி, கடும் காற்றால் பரவிய பெரும் சுடருடன் எரிந்த தீயை கட்டுப்படுத்தினர்.

அல்லைப்பிட்டி அலுமினியம் தொழிற்சாலை பகுதியிலிருந்து அராலிச் சந்தி வரையிலான வயல்வெளிகளில் ஆண்டுதோறும் விசமிகள் தீவைத்துவருவது வழக்கமாக மாறியுள்ளது.
இதனால் தீ அணைக்கும் பணிகளும் தொடர்கதையாகி வருகின்றன.
ஆனால் இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் விசமிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

குறிப்பாக, இப்பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பருவ காலங்களில் பல வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து தங்கள் இனப்பெருக்கங்களைச் செய்வது வழமையான ஒன்றாகும். ஆனால் இவ்வாறான தீவைப்புகள் அந்தப் பறவைகள் சரணாலயத்தையே ஆபத்துக்குள் தள்ளியுள்ளது.

மேலும், தீவைப்புகளால் புற்கள் எரிந்து அழிவதால் அவற்றை உணவாகக் கொண்டிருந்த கால்நடைகள் பசி காரணமாக வீடுகளுக்குள் நுழையும் நிலையும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்