உள்ளூர்

சர்வதேச காணாமல் போனோர் தினத்தையொட்டிய பேரணிக்கு அழைப்பு

சர்வதேச வலிந்து காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, நாளை சனிக்கிழமை (30-08) மட்டக்களப்பில் பெரிய பேரணி நடைபெற உள்ளது.

இதற்காக திருகோணமலை நகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, மக்கள் அனைவரையும் பேரணியில் கலந்துகொள்ள அணி திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை திருகோணமலை காணாமல் போன உறவுகளின் சங்கம் மற்றும் வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

போஸ்டர்களில் தெரிவிக்கப்பட்டதுபோல், இலங்கை அரசின் இனவழிப்பு நடவடிக்கைகளால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த சர்வதேச நீதி கோரும், தமிழ் மக்களின் வலிந்து காணாமல் போன நிகழ்வுகள் இனியும் நிகழக்கூடாததை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த பேரணி நடைபெற உள்ளது.
மேலும், தமிழ் இன அழிப்புக்கு நீதி கோரும் நடவடிக்கை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட காணாமல் போன உறவுகளின் சங்க தலைவி செபஸ்டியன் தேவி நாளை நடைபெறவுள்ள பேரணிக்கு அனைத்து சமூகப் பகுப்பினரும், பல்கலைக் கழக மாணவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்