உள்ளூர் முக்கிய செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைக பயணிகள் பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு இருக்கை கட்டி (Seat Belt) அவசியம்,நாளை வர்த்தமானி வெளியீடு

நாளை முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகள் பேருந்துகளில் பயணிக்கும் அனைவரும் கட்டாயமாக பாதுகாப்புக் இருக்கை கட்டி(Seat Belt) அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வரையறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தி ஆகஸ்ட் 31ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுக மற்றும் சிவில் வானூர்தி அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உள்அவையின் தலைவர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சரவை ஆலோசனைக்குழு கூட்டத்தில் அவர் தலைமையில் வெளியிடப்பட்டதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமைச்சர் மேலும் விளக்கமளித்தபோது, ‘க்ளீன் இலங்கை’ (Clean Sri Lanka) திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாகக் கூறினார்.
பள்ளி பேருந்துகள், அலுவலகப் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா பேருந்துகள் உள்ளிட்ட பயணிகள் பேருந்துகளில் பாதுகாப்புக் கைக்கட்டிகள் பொருத்துவதற்காக மூன்று மாத அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னர் சுமார் 2,000 ரூபாவாக இருந்த பாதுகாப்புக் கைக்கட்டியின் விலை தற்போது 5,000 ரூபா முதல் 7,000 ரூபா வரை உயர்ந்துள்ளதாகவும், இந்த விலை அதிகரிப்பை நுகர்வோர் விவகார அதிகாரசபை கண்காணிக்க வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

நீண்ட தூரப் பயணிகள் பேருந்துகளில் பாதுகாப்புக் கைக்கட்டியை கட்டாயப்படுத்துவது குறித்துப் பொதுமக்கள் கருத்துக்களும் பெறப்பட்டதாகவும், பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்ததால் விரைவில் அந்தத் திட்டமும் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வு சித்ரா இனோவேஷன் லாப் (Citra Innovation Lab) மூலம் மேற்கொள்ளப்பட்டு, பயணிகள், ஓட்டுநர்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் உள்ளிட்ட சுமார் 2,100 பேரின் கருத்துக்கள் சேகரிக்கப்பட்டதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்ட அறிக்கை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் வாகனங்களுக்கு உதிரிபாகங்கள் தரம் பரிசோதனை செய்யும் புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்படும் எனவும், தேவையான சட்ட திருத்தங்களுடன் கூடிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தரத்திற்கேற்ப இல்லாத டயர்களைக் கொண்ட வாகனங்களுக்கு அதிவேக நெடுஞ்சாலைகளில் அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்