உள்ளூர்

செம்மணி மனித புதைகுழியில் இன்று 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 209 ஆக உயர்வு

செம்மணி மனித புதைகுழியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் வரையிலான அகழ்வுப் பணிகளில், புதிதாக 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இத்துடன், செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று ஏழாவது நாளாக தொடரப்பட்டது.

நீதிமன்றம் அனுமதி வழங்கிய 45 நாட்களில், இன்றைய தினம் 39ஆவது நாளாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதுவரையிலான கட்டப்படியான அகழ்வுப் பணிகள் மொத்தம் 48 நாட்களாக நடைபெற்று வருகின்றன.

இன்றைய தினம் எடுக்கப்பட்ட 10 எலும்புக்கூட்டு தொகுதியுடன், இதுவரை 191 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகள் எண்ணிக்கை 209 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய மதியத்துடன் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நாளை திங்கட்கிழமை காலை மீண்டும் அகழ்வுப் பணிகள் தொடங்கவுள்ளன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்