உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டுத் திட்டத்தினை ஜனாதிபதி தொடங்கி வைத்தார்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வரவு–செலவுத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரூபா நிதியின் செயற்பாட்டை இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி மற்றும் அவருடன் வந்த குழுவினரை வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி மதிவதனி விவேகானந்தராஜா ஆகியோர் வரவேற்றனர். பின்னர் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது.

வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் வரவேற்புரையை நிகழ்த்தியதுடன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ. சந்திரசேகர் உரையாற்றினார்.

அதன்பின், யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டம் ஜனாதிபதியால் தொடக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வை நூலகத்தின் பிரதம நூலகர் நெறிப்படுத்தினார்.

இந்த வைபவத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பாராளுமன்ற உறுப்பினர்கள் எஸ். ஸ்ரீபவானந்தராஜா, க. இளங்குமரன், ஜெ. ரஜீவன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், மாநகர சபை உறுப்பினர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் நூலக வாசகர் வட்டத்தினரும் பங்கேற்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்