உள்ளூர்

ரணிலுக்கு ஆதரவாக போராடிய போராட்டக்காரர்களை கைது செய்ய நடவடிக்கை- வுட்லர்

கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம் முன்பாக கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது.

இதற்காக மூடப்பட்ட சுற்றுச்சுவர் பாதுகாப்பு கெமரா (CCTV) காட்சிகள் மற்றும் உளவுத்துறை அறிக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன என்று காவல்துறை ஊடகப் பேச்சாளரும் காவல்துறை உதவி அத்தியட்சகருமான சட்டத்தரணி எப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவும் சமீபத்தில், இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை அடையாளம் காண விசாரணைகள் நடைபெற்று வருவதாக அறிவித்திருந்தார்.

ASP வுட்லர், இது பற்றி ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் காவல்துறையினர் தற்போது விசாரணையில் ஈடுபட்டுள்ளன.

போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை (CCTV) காட்சிகள் மற்றும் உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில் அடையாளம் காணும் பணியில் உள்ளோம்.
அது முடிந்ததும் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி, ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை எடுக்கப்பட்டபோது நீதிமன்ற வளாகம் முன்பாக போராட்டம் வெடித்தது.
ஆகஸ்ட் 22ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

அவரை விடுவிக்க வேண்டும் எனக் கோரி முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றம் முன்பாகக் கூடினர்.
அப்போது நிலைமை மோசமடைந்ததால் காவல்துறை மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் நடவடிக்கை எடுத்தனர்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி நுழைவாயில்களை மறித்து போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்தப் போராட்டத்தின் போது ஒரு காவல்துறை அதிகாரி காயமடைந்ததோடு, முன்னாள் உள்ளூராட்சி அரசியல்வாதி ஒருவர் இதனுடன் தொடர்புபட்டதாகக் கூறி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்