உள்ளூர்

செம்மணியில் இன்று ஒன்பது எலும்புக்கூடுகள் அடையாளம்.

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள மனித புதைகுழியில் இருந்து இன்று (புதன்கிழமை) மேலும் ஏழு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதனுடன் கூடுதலாக, இன்னும் ஒன்பது எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த மாதம் 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, இன்று 10ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கிய நிலையில், இன்று 42ஆவது நாளாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதுவரை கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்ட 51 நாட்கள் அகழ்வு பணிகளில், இன்று கண்டுபிடிக்கப்பட்ட ஏழு எலும்புக்கூட்டு தொகுதிகளுடன், மொத்தம் 213 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டு தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 231 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்>யாழ் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தருக்கு விண்ணப்பம் கோரல்.

https://www.youtube.com/@pathivunews/videos

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்