உள்ளூர்

டிஜிட்டல் சேவை வரி அமுலாக்கம் ஒத்திவைப்பு.

2025 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டத்தின் மூலம் 2025.10.01 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்குவரும் வகையில் வதிவிடமற்ற ஆட்களால் (Non – Resident) டிஜிட்டல் சேவை வழங்கல்களுக்கு பெறுமதி சேர் வரி சேர்க்கப்பட்டுள்ளது.

ஆயினும், டிஜிட்டல் சேவைகளுக்கான பெறுமதி சேர் வரி அறிவிடும் போது அதற்கு இயங்கியொழுகுவதற்கு தயாராவதற்கு மேலதிக காலத்தை வழங்குமாறு நடைமுறைச் சாத்தியமான பல காரணங்கள் குறிப்பிடப்பட்டு வதிவிடமற்ற சேவை வழங்குநர்களால் கோரப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2025.10.01 ஆம் திகதிக்குப் பதிலாக குறித்த வரி நடைமுறையை 2026.04.01 ஆகத் திருத்தம் செய்வதற்காக, அதற்கு திருத்தப்பட்ட ஏற்பாடுகள் தற்போது 7 வரைவாக்கம் செய்யப்பட்டு பெறுமதி சேர் சட்டத்தைத் திருத்தம் செய்யப்பட்டு வருகின்ற சட்டமூலத்தில் சேர்பெறுமதி வரிச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கான வரைபை உட்சேர்ப்பதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதையும் படியுங்கள்>மன்னாரில் 33வது நாளாக தொடரும் போராட்டம்.

https://www.youtube.com/@pathivunews/videos

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்