உள்ளூர்

எல்ல பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

ஊவா மாகாணம், பதுளை மாவட்டம் எல்ல – வெல்லவாய வீதியில் நேற்று இரவு நிகழ்ந்த பயங்கர பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளது.

விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 9 பெண்களும், 6 ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 11 ஆண்கள், 7 பெண்கள் மற்றும் 5 குழந்தைகள் அடங்குவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய தங்காலை நகர சபை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, எதிரே வந்த வாகனத்துடன்; மோதி 200 மீற்றர் பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து பொலிஸார், இராணுவத்தினர், விமானப்படை, தீயணைப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

விபத்து நடந்த போது பேருந்தில்; 35 இற்கும் மேற்பட்டோர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

{{CODE 1}}

இதையும் படியுங்கள்>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை OMP மூலம் வழங்க அரசாங்கம் முயற்சி

https://www.youtube.com/@pathivunews/videos

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்