உள்ளூர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் இ. குமாரவடிவேல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக வாழ்நாள் பேராசிரியர் இ. குமாரவடிவேல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் உடனடியாகச் செயற்படும் வகையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அமுலாகும்.

1978 ஆம் ஆண்டின் பல்கலைக்கழகச் சட்டம் எண் 16 மற்றும் அதன் பின்னர் செய்யப்பட்ட திருத்தச் சட்டங்களின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட நிறைவேற்று அதிகாரத்திலேயே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமநாயக்கவினால் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதனின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் பேராசிரியர் இ. குமாரவடிவேல் புதிய வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியர் இ. குமாரவடிவேல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் மூத்த கல்வியியலாளராக விளங்குகிறார்.

பௌதிகவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், விஞ்ஞான பீடாதிபதியாகவும், பதில் துணைவேந்தராகவும் முன்னர் பதவி வகித்தவர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்