உள்ளூர்

இலங்கைக்கு மருந்துகளை கொள்வனவு செய்ய அரசு பொறிமுறையொன்றை நிறுவ முடியாதுள்ளது

இலங்கையின் மருந்து இறக்குமதியை பல்முகப்படுத்தும் என அரசு பரவலாக அறிவித்திருந்த திட்டம், அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்து பல மாதங்கள் கடந்தும், விவாதத்தைத் தாண்டாமல் நின்று போயுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான், சீனா, இந்தோனேசியா, துருக்கி, வங்காளதேசம் போன்ற நாடுகளிலிருந்து மருந்துகள் பெறுவதற்கான முன்மொழிவு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

சுகாதார அமைச்சு, நீடித்து வரும் மருந்துக் குறைபாடுகளின் நடுவில்; உயிர் காக்கும் மருந்துகளைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என வலியுறுத்துகின்றது.

எனினும், உள்ளகத் தகவல்களின் படி, இலங்கையின் மொத்த மருந்து இறக்குமதியில் சுமார் 80 வீதமான மருந்துகள் இந்தியாவிலிருந்தே பெறப்படுவதால், இந்தியா தன்னுடைய ஏகபோக சந்தைப்படுத்தலை தொடர்ந்து வைத்திருக்கிறது.

அரசு-அரசு (G2G) அடிப்படையில் மருந்துகளை நேரடியாகப் பெறுவதற்கான சிறப்பு குழு ஒன்று சமீபத்தில் நியமிக்கப்பட்டது.

ஆனால் இது, வழக்கமான கொள்முதல் முறைகளை புறக்கணித்து, வெளிப்படைத்தன்மையற்ற ஒப்பந்தங்களை முன்னிறுத்துகிறது எனக் குற்றம்சாட்டி, மருந்துத் துறை பங்குதாரர்களின் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தாலும், இறுதி திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன் தேசிய கொள்முதல் ஆணையத்தின் அங்கீகாரம் இன்னும் பெறப்படவில்லை.
இதற்கிடையில், பல பிராந்திய அரசுகளுக்கு தேவையான சுமார் 100 அவசர மருந்துகளின் பட்டியலுடன் கூடிய தூதரகக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

எனினும், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்கள் இல்லாததால் குறைந்த அளவிலான மருந்துகள் மட்டுமே இந்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் என அதிகாரிகள் ஒப்புக்கொள்கின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்